Paristamil Navigation Paristamil advert login

இந்தோனேசியாவில்  திடீர் வெள்ளம் -  10 பேர் பலி

இந்தோனேசியாவில்  திடீர் வெள்ளம் -  10 பேர் பலி

10 மார்கழி 2024 செவ்வாய் 05:49 | பார்வைகள் : 4950


இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2 பேர் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஜாவா மாகாணத்தின் சுகாபூமி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால், மலையோர குக்கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழுந்ததால், 170க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் 172 கிராமங்களை அழித்தது மற்றும் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக அரசாங்க முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 31 பாலங்கள், 81 சாலைகள் மற்றும் 539 ஹெக்டேர் நெல் வயல்களை அழித்தன. 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்