நோர்து-டேம் : தீயணைப்பு படையினருக்கு கெளரவிப்பு!
7 மார்கழி 2024 சனி 19:06 | பார்வைகள் : 2045
நோர்து-டேம் தேவாலயத்தின் திறப்பு விழா நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. விருந்தினர்கள் வருகை தந்த பின்னர், நிகழ்வுகள் பாடல்களுடன் ஆரம்பித்தன.
அதன்போது தீயணைப்பு படையினருக்கு கெளரவிப்பு வழங்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு தேவாலயம் தீவிபத்துக்கு உள்ளானபோது, தீயணைப்பு படையினர் துரிதமாக செயற்பட்டு தீயை கட்டுப்படுத்தியிருந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம், தீயணைப்பு துறையினர் அவர்களது சீருடையுடன் தேவாலயத்துக்குள் அணிவகுத்து வந்தனர்.
அவர்களுக்கான நன்றியும், கெளரவமும் வழங்கப்பட்டது. அதன் பின்னரே ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உரையாற்றத்தொடங்கினார்.