சந்திப்பு!!
.jpeg)
7 மார்கழி 2024 சனி 17:27 | பார்வைகள் : 10935
டொனால் ட்ரம்ப் - இம்மானுவல் மக்ரோன் - வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகிய மூன்று ஜனாதிபதிகள் இன்று மும்முனை சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டனர்.
நோர்து-டேம் திறப்பு விழாவுக்காக வருகை தந்துள்ள அமெரிக்க மற்றும் உக்ரேனிய ஜனாதிபதிகளை வரவேற்ற ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இருவரையும் சந்தித்து உரையாக வைத்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் எலிசே மாளிகைக்கு 4.40 மணிக்கு வருகை தந்தார். வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மாலை 5.30 மணிக்கு எலிசேக்கு வருகை தந்தார். பின்னர் மூவரும் ஒருவரை ஒருவர் கைகுலுக்கி சந்தித்துக்கொண்டனர்.
மாலை 6.10 மணி வரை சந்திப்பு தொடர்ந்தது. அவர்களுடனான சந்திப்பு இன்று மீண்டும் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதி வேகமாக யுத்த நிறுத்தம் ஒன்றை உக்ரேனில் தோற்றுவிக்க தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்ததாக அறிய முடிகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1