Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

சிரியாவில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் -  அச்சத்தில் மக்கள்

சிரியாவில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் -  அச்சத்தில் மக்கள்

7 மார்கழி 2024 சனி 13:33 | பார்வைகள் : 9463


சிரியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் பெருமளவில் இடம்பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பயங்கரவாதிகள் தலைநகர் டமஸ்கசை நோக்கி முன்னேறிவிடுவார்கள் என்ற அச்சத்தில் சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் நேற்று வடக்கே ஹமாவைக் (Hama) கைப்பற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது கடந்த வாரம் அலெப்போவின் கட்டுப்பாட்டை இழந்த ஜனாதிபதி பஷர் அல் அசாத் தலைமையிலான அரசாங்கத்துக்கு ஏற்பட்ட இரண்டாவது பின்னடைவு என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வாரம் சிரிய அரசாங்கத்திற்கு எதிராகத் தாக்குதலை ஆரம்பித்த பயங்கரவாதிகள் தற்போது இரண்டு முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். இது தவிர, அவர்கள் தெற்கிலும் முன்னேறிச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.


அலெப்போவிலிருந்து (Aleppo) தலைநகர் டமஸ்கஸ் செல்லும் வீதியில் உள்ள ஹோம்ஸ் நகரத்தை நோக்கி அவர்கள் நகர்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, சிரிய இராணுவம் பல நாட்கள் சண்டையிட்ட போதிலும், ஹமா நகரத்தின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இந்த நிலையில், ஹோம்ஸ் நகரைப் பாதுகாக்க முடியுமா என்பது சந்தேகமாக உள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்டுள்ள சிரிய கண்காணிப்புக் குழு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்