ஆசிரியர்கள் - அரச ஊழியர்கள் பணிநீக்கம்... புதிய வரவுசெலவுத்திட்டத்தில் சிக்கல்!!

1 மார்கழி 2024 ஞாயிறு 18:31 | பார்வைகள் : 9444
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் ஆசிரியர் மற்றும் அரச ஊழியர்களின் பணிநீக்கம் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 4,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாகவும், 2,201 அரச ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பெருமளவான நிதியினை சேகரிக்க முடியும் எனவும், அதற்கு மாற்றாக வேறு சில துறைகளில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறைக்கு 619 வேலைவாய்ப்புகளும், இராணுவத்தில் 630 வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்திக்கொடுக்க உள்ளன.