வரவுசெலவு 2025 : 400 பிரெஞ்சு நிறுவனங்களுக்கு நெருக்கடி!!
1 மார்கழி 2024 ஞாயிறு 18:18 | பார்வைகள் : 17028
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட வரைவு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வரும் வாரத்தில் அதன் இறுதி வடிவம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த வரவுசெலவுத்திட்டத்தில் 400 பிரெஞ்சு நிறுவனங்களுக்கு வரி ஏய்ப்பு மூலம் பெரும் நெருக்கடி ஒன்றை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 400 நிறுவங்களை ‘விதிவிலக்கான’ ஒரு பங்களிப்புக்கு அரசு அழைத்துள்ளது. அவர்கள் மூலம் 2025 ஆம் ஆண்டில் 500 மில்லியன் யூரோக்களும், 2026 ஆம் ஆண்டில் 300 மில்லியன் யூரோக்களும் சேகரிக்க உள்ளதாகவும், இதனால் அந்த நிறுவனங்களுக்கு 20% சதவீத வரி அறவிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதத்துக்கு 1 பில்லியனுக்கும் அதிகமாக வருவாய் ஈட்டும் நிறுவனங்களே இதில் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களது குரல்வளை நெருக்கப்படுவதாக பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதேவேளை, இந்த பங்களிப்பு ஒரு விதிவிலக்கானது எனவும், இது தொடராது எனவும் அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகைப்படத்தில் : பிரதமர் Michel Barnier.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan