ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்

26 ஐப்பசி 2024 சனி 06:41 | பார்வைகள் : 5238
2024 ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் நோக்கில் ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் நேரடி தாக்குதலை நடத்தியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரானின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளது.