Noisy-Champs : தொடருந்து நிலையத்துக்குள் பாய்ந்த மகிழுந்து!

23 ஐப்பசி 2024 புதன் 16:28 | பார்வைகள் : 9396
மகிழுந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தொடருந்து நிலையத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இன்று ஒக்டோபர் 23, புதன்கிழமை இச்சம்பவம் Noisy-Champs (Seine-Saint-Denis) தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றது. நண்பகலுக்கு சற்று முன்னதாக தொடருந்து நிலையத்தை நோக்கி வந்த மகிழுந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்று தொடருந்து நிலையத்தின் முகப்பு கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளது.
அதிஷ்ட்டவசமாக இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. ஆனால் இச்சம்பவத்தினால் Noisy-le-Grand–Mont d'Est - Torcy நிலையங்களுக்கிடையிலான RER A சேவை சிறிதுநேரம் தடைப்பட்டது.
(தொடருந்து சேவைகள் சில நிமிடங்களிலேயே மீண்டும் இயக்கப்பட்டது)
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025