பரிஸ் : மிதிவண்டி சாரதி கொலை.. நாடு முழுவதும் அஞ்சலிக்கு ஏற்பாடு!!

பரிஸ் : மிதிவண்டி சாரதி கொலை.. நாடு முழுவதும் அஞ்சலிக்கு ஏற்பாடு!!

18 ஐப்பசி 2024 வெள்ளி 15:01 | பார்வைகள் : 12085


மிதிவண்டியில் பயணித்த ஒருவர் வாகனம் ஒன்றினால் மோதித்தள்ளப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து, அவருக்கு நாடு முழுவதும் அஞ்சலி கூட்டங்கள் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.

27 வயதுடைய Paul என்பவரே இந்த செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டிருந்தார். அவருக்கான அஞ்சலி நிகழ்வுகள் பரிசின் பல இடங்களில் இடம்பெற்றுவரும் நிலையில், நாளை ஒக்டோபர் 19, சனிக்கிழமை நாட்டின் பல நகரங்களில் அவருக்கான அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளன.

52 வயதுடைய வாகன சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படிக்க