Paristamil Navigation Paristamil advert login

மலேஷியாவில் அதிகரிக்கும்  மனித கடத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் 

மலேஷியாவில் அதிகரிக்கும்  மனித கடத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் 

17 ஐப்பசி 2024 வியாழன் 14:20 | பார்வைகள் : 5600


மலேஷியாவில்  மனித கடத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் பாரியளவில்  இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பு ஒன்றின் போது  சம்பவங்களில் ஈடுபட்ட மதக் குழுவொன்றைச் சேர்ந்த 171 பேர் கைது செய்யப்பட்டதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பில் மனித கடத்தலுக்கு தயார்படுத்தப்பட்டிருந்த மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 402 சிறுவர்களும் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்