Val-d'Oise : போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை... எட்டுப் பேர் கைது..!!

Val-d'Oise : போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை... எட்டுப் பேர் கைது..!!

16 ஐப்பசி 2024 புதன் 13:03 | பார்வைகள் : 10063


Val-d'Oise மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை இந்த நடவடிக்கை இடம்பெற்றது. Montigny-lès-Cormeilles நகரை தலைமையிடமாகக் கொண்டு நீண்ட நாட்களாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றை காவல்துறையினர் கைது செய்தனர்.  மொத்தமாக எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள், பணம், துப்பாக்கி போன்றவற்றைக் கைப்பற்றியதுடன், வாகனங்கள் இரண்டும் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்ந்து படிக்க