தனிப்பெரும்பான்மையை பெற்ற ஜனாதிபதிக்கு இந்தியா வாழ்த்து!

16 கார்த்திகை 2024 சனி 05:55 | பார்வைகள் : 10248
நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சக ஜனநாயக நாடாக இந்தியா, இந்த மக்கள் ஆணையினை வரவேற்பதாகவும், மக்களின் நலன்களுக்காக இருதரப்பு உறவினை மேலும் வலுவாக்க உறுதி கொண்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்பை முன்னேற்றுவதற்கும் இலங்கையின் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த விடயம் பகிரப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக இலங்கையிலுள்ள ஜப்பானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையுடனான ஆழமான நம்பிக்கை மற்றும் நட்பைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜப்பானியத் தூதுவர் அக்கியோ இசோமாடா தெரிவித்துள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025