நோர்து-டேம் திறப்பு விழாவின் போது உரையாற்றும் ஜனாதிபதி மக்ரோன்!
31 ஐப்பசி 2024 வியாழன் 15:15 | பார்வைகள் : 7707
திருத்தப்பணிகளுக்கு உள்ளாகிவரும் நோர்து-டேம் தேவாலயம் எதிர்வர்ம் டிசம்பர் 7 ஆம் திகதி திறக்கப்பட உள்ளது. இந்த திறப்புவிழாவின் போது ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உரையாற்ற உள்ளார்.
திறப்புவிழாவுக்கு வருகை தரும் ஜனாதிபதி மக்ரோன், தேவாலயத்துக்கு உள்ளே வைத்து அவர் உரையாற்ற உள்ளார்.
ஏப்ரல் 15, 2019 ஆம் ஆண்டு நோர்து-டேம் தேவாலயம் தீவிபத்துக்குள்ளானது. ‘அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேவாலயம் மீள புணரமைக்கப்படும்’ என ஜனாதிபதி மக்ரோன் உறுதியளித்திருந்தார். அதன்படி, இவ்வருடம் தேவாலயம் முற்றுமுழுதாக திறக்கப்பட உள்ளது. ”நாங்கள் எங்களது உறுதிமொழியை நிறைவேற்றியுள்ளோம்!” என தேவாலயத்தின் பிரதான பேராயர் Mgr Ulrich தெரிவித்தார்.
டிசம்பர் 7 ஆம் திகதி திறப்புவிழாவின் பின்னர், மறுநாள் 8 ஆம் திகதி மாபெரும் சிறப்பு வழிபாடுகள் அங்கு இடம்பெற உள்ளதாக அறிய முடிகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan