'பிரிவதற்கு வாய்ப்பில்லாத நட்பு!' - மொராக்கோ சுற்றுப்பயணத்தில் மக்ரோன்!!
31 ஐப்பசி 2024 வியாழன் 08:47 | பார்வைகள் : 22351
மொராக்கோவில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், நேற்று புதன்கிழமை இரவு அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.
'பிரான்ஸ்-மொராக்கோ நட்பு பிரிவதற்கு வாய்ப்பில்லாதது. இந்த உலகம் யுத்தத்தையும், கொவிட்டையும் (Covid -19) கண்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நல்ல நட்பும், நல்லுறவும் தான் நாடுகளைப் பலப்படுத்தும். நாங்கள் ஒன்றாக இணைந்து உற்பத்திகளில் ஈடுபடுகிறோம். இருவரும் ஒன்றாக வளர்கிறோம்!' என தனது மொராக்கோ பயணம் குறித்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குறிப்பிட்டார்.
நேற்று ஒக்டோபர் 30, புதன்கிழமை இரவு அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் மொராக்கோவின் M2 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மக்ரோன், அதன்போதே இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் இந்த அரசபயணத்தின் போது €10 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire