Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல்  தாக்குதல்...! 19 பேர் பலி

லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல்  தாக்குதல்...! 19 பேர் பலி

28 ஐப்பசி 2024 திங்கள் 08:36 | பார்வைகள் : 9989


லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 

இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்ற தையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.

போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும், ஈராக்கில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்த அமைப்புகள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. 

இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 

லெபனான் மீது இஸ்ரேல் நேற்று மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர்.

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் உள்பட இதுவரை மொத்தம் 2 ஆயிரத்து 672 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

வர்த்தக‌ விளம்பரங்கள்