பார்டர் கவாஸ்கர் தொடருக்கான டெஸ்ட் அணியில் தமிழக வீரர் அறிமுகம்: யார் அவர்?

26 ஐப்பசி 2024 சனி 15:04 | பார்வைகள் : 3853
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இரண்டு தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் திகதி தொடங்குகிறது.
இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மா அணித்தலைவராகவும், ஜஸ்பிரித் பும்ரா துணைத் தலைவராகவும் செயல்பட உள்ளனர்.
18 பேர் கொண்ட இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், அபிமன்யு ஈஸ்வரன் என இரண்டு தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில் அபிமன்யு ஈஸ்வரன் இந்த தொடர் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். உத்தரகாண்டின் டெஹ்ராடூனில் தமிழ் தந்தைக்கும், பஞ்சாபி தாய்க்கு பிறந்தவர் அபிமன்யு ஈஸ்வரன்.
29 வயதாகும் இவர் 99 முதல் தர கிரிக்கெட்டில் 7638 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 27 சதங்கள், 29 அரைசதங்கள் அடங்கும்.
அதேபோல் இடம்பெற்றுள்ள மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிரட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1