Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ஓய்வை அறிவித்த ஜாம்பவான் ரஃபேல் நடால்! 

ஓய்வை அறிவித்த ஜாம்பவான் ரஃபேல் நடால்! 

11 ஐப்பசி 2024 வெள்ளி 04:50 | பார்வைகள் : 7264


டென்னிஸ் விளையாட்டின் ஜாம்பவான் வீரர் ரபேல் நடால் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

22 கிராண்ட்ஸ்லாம்(grand slam) தனிநபர் பட்டங்களின் வெற்றியாளரான ஸ்பெயனின் ஜாம்பவான் டென்னிஸ் வீரர் ரபேல் நடால், வியாழக்கிழமை தனது தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக  அறிவித்துள்ளார்.

 டேவிஸ் கப் இறுதிப் போட்டிக்கு பிறகு இந்த முடிவானது நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் 14 முறை பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பட்டங்களை வென்ற 38 வயதான ரஃபேல் நடால், கடந்த சில ஆண்டுகள் குறிப்பாக கடந்த 2 ஆண்டுகள் மிகவும் கடினமானது என்று  வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தனது திறமையின் மூலம் உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவராக ரஃபேல் நடால் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

டென்னிஸ் விளையாட்டில் பல சாதனைகளை தனதாக்கிய ரஃபேல் நடால் ஓய்வை அறிவித்து இருப்பது டென்னிஸ் உலகின் ஒரு சகாப்தத்தின் முடிவை குறிக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்