கொழும்பில் முச்சக்கரவண்டியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

10 ஆவணி 2024 சனி 14:50 | பார்வைகள் : 5118
கொழும்பு, பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு நாராஹென்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பம்பலப்பிட்டி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025