ஒலிம்பிக் பலூனைப் பார்வையிட இறுதி சந்தர்ப்பம்..!

10 ஆவணி 2024 சனி 13:29 | பார்வைகள் : 14110
ஒலிம்பிக் போட்டிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இராட்சத ஒலிம்பிக் பலூனை (vasque olympique) பார்வையிட, நாளை ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளே சந்தர்ப்பம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிஸ் 1 ஆம் வட்டாரத்தின் jardin des Tuileries தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பலூனை நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். நாளை ஓகஸ்ட் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையுடன் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைகின்றன. இந்நிலையில், இந்த பலூன் இறக்கப்பட உள்ளதாக அறிய முடிகிறது.
குறித்த பலூனை நிரந்தரமாக அமைக்க பலதரப்பட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, பறக்கும் பலூம் இறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பலூன் 30 மீற்றர் உயரமும், 7 மீற்றர் அகலமும் கொண்டது. இதனை இதுவரை 200,000 இற்கும் மேற்பட்ட மக்கள் வந்து பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025