படப்பிடிப்பில் விபத்து.. சூர்யாவுக்கு என்ன ஆச்சு?
9 ஆவணி 2024 வெள்ளி 10:28 | பார்வைகள் : 6438
சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் தீவுகளில் நடந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஊட்டியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் சூர்யா உள்பட பல முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவல் படி ’சூர்யா 44’ படப்பிடிப்பில் ஒரு சண்டைக் காட்சியின் போது சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சூர்யாவிடம் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனை அடுத்து சூர்யா முழு ஓய்வு எடுக்க இருப்பதாகவும் சூர்யா இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் சில நாட்கள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், ஜாக்சன் கலை இயக்கத்தில், பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில் சபிக் முகமது அலி படத்தொகுப்பில் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகவுள்ளது. மேலும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன்பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan