வளர்ப்பு பிராணிகள் திருட்டு அண்மைக்காலமாக Franceசில் 20% சதவீதம் அதிகரிப்பு.
2 புரட்டாசி 2023 சனி 19:27 | பார்வைகள் : 19687
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் France சில் வளர்ப்பு பிராணிகள் திருடப்படுவது 20% சதவீதத்தால் அதிகரித்து இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே உரிமையாளர்கள் அவதானமாக இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வளர்ப்பு பிராணிகளில் சிறப்பாக வளர்ப்பு நாய்களே அதிகம் திருடப்படுவதாக தெரிவிக்கும் காவல்துறையினர்; 2021ம் ஆண்டு 378 வளர்ப்பு நாய்களும், 2022ம் ஆண்டு 459 வளர்ப்பு நாய்களும் திருடப்பட்டாதாக வழக்குகள் பதிவாகியுள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.
திருடப்படும் அத்தகைய வளர்ப்பு நாய்கள் அதன் தரத்திற்கு ஏற்ப இணையத்தளங்களில் 4000€ வரை விற்பனை செய்யப்படுகிறது எனவும், சில வளர்ப்பு நாய்கள் இனப்பெருக்கம் செய்யப் பயன்படுகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே உரிமையாளர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan