இலங்கையில் மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்

3 புரட்டாசி 2024 செவ்வாய் 10:40 | பார்வைகள் : 11995
அவிசாவளை, கெடஹெத்த பகுதியில் கணவன் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (02) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திவுரும்பிட்டிய, கெடஹெத்த பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
கணவன் மனைவிக்கிடையிலான குடும்பத் தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் அவிசாவளை, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025