பாகிஸ்தானில் திடீர் நிலச்சரிவு! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலி
31 ஆவணி 2024 சனி 02:34 | பார்வைகள் : 9009
கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதனால், அப்பர் டிர் மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
வீட்டின் மேல் சரிந்து விழுந்ததில் உள்ளே இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 3 ஆண்கள், 3 பெண்கள், 6 குழந்தைகள் என பின்னர் தெரிய வந்தது.
இதனையடுத்து விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து அப்பகுதியை அகற்றுவதற்கான மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan