ஜொந்தாம் வீரர் பலி.. குற்றவாளி கைது!

27 ஆவணி 2024 செவ்வாய் 13:27 | பார்வைகள் : 12314
நேற்று திங்கட்கிழமை தென் கிழக்கு எல்லை மாவட்டமான Mougins (Alpes-Maritimes) நகரில் மகிழுந்து ஒன்று மோதியதில் ஜொந்தாம் வீரர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். குற்றவாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய நிலையில், அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
Cannes நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்லதாக உள்துறை அமைச்சர் அறிவித்தார். கைது செய்யப்பட்டவர் பல்வேறு வீதி கட்டுப்பாட்டுகளை மீறிய வழக்குகளில் தொடர்புடையவர் எனவும், அதிவேகமாக பயணித்து நேற்று இரவு 54 வயதுடைய ஜொந்தாம் வீரர் ஒருவரை கொன்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4 மணிக்கு சற்று முன்னதாக அவர் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025