கிளிமஞ்சாரோ சிகரத்தை ஏறிச் சாதனை படைத்த 5 வயது சிறுவன்...!

27 ஆவணி 2024 செவ்வாய் 06:26 | பார்வைகள் : 2885
ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரமாக தான்சானியாவில் 19,340 அடி உயரத்தில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ சிகரம் கருதப்படுகின்றது.
ஆசியளவில் குறைந்த வயதில் இந்த கிளிமஞ்சாரோ சிகரத்தைத் எரியவர் என்ற சாதனையைப் பஞ்சாபைச் சேர்ந்த 5 வயதான டெக்பீர் சிங் படைத்துள்ளார்.
கடந்த 18ஆம் திகதி கிளிமஞ்சாரோ மலையின் மீது ஏற ஆரம்பித்த டெக்பீர் சிங், 23ஆம் திகதி அந்த மலையின் மிக உயரமான இடமான உஹுருவை அடைந்துள்ளார்.
இதேவேளை, டெக்பீர் சிங்கின் இந்த சாதனைக்காக அவரின் தந்தையும் அவருடன் மலை எறியுள்ளார்.
மகனின் இந்த சாதனை தொடர்பில் கருத்து வெளியிட்ட தந்தை,
"டெக்பீர் சிங் இதற்காகக் கடுமையான மலையேற்ற பயிற்சிகள், இதயம் மற்றும் நுரையீரலுக்கான சுவாச பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொண்டார்.
அவரது இந்த சாதனை எங்கள் குடும்பத்தைப் பெருமைப்படுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.