விண்வெளியில் 2 விண்மீன் திரள்கள் இணையும் புகைப்படத்தை வெளியிட்ட நாசா
13 ஆடி 2024 சனி 08:45 | பார்வைகள் : 6780
அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, கடந்த 2021-ம் ஆண்டு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பியது.
இந்த தொலைநோக்கி விண்வெளியில் இருந்து அரிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இது விஞ்ஞானிகளின் ஆய்வுகளுக்கு உதவி இருக்கிறது.
இந்த நிலையில் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் முதல் படங்கள் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் நாசா புதிய படத்தை வெளியிட்டு உள்ளது. இரண்டு விண்மீன் திரள்கள் இணையும் படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
பெங்குயின் மற்றும் எக் என அழைக்கப்படும் விண்மீன் திரள்கள் 326 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் ஹைட்ரா விண்மீன் தொகுப்பில் அமைந்து உள்ளன. இந்த விண்மீன் திரள்கள் இணைவதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புகைப்படம் எடுத்து உள்ளது.
இதுகுறித்து நாசா விஞ்ஞானி ஜேன் ரிக்பி கூறும்போது,ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படத்தில் நாம் இரண்டு விண்மீன் திரள்களைக் காண்கிறோம், ஒவ்வொன்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் தொகுப்பாகும்.
விண்மீன் திரள்கள் ஒன்றிணைக்கும் செயல்பாட்டில் உள்ளன. சிறிய விண்மீன் திரள்களில் இருந்து வளர இதுபோன்ற நிகழ்வு பொதுவானதாகும் என்றார்.
நாசா தலைமையக வானியற்பியல் பிரிவு இயக்குனர் மார்க் கிளம்பின் கூறும்போது, இந்த பணி இதுவரை கவனிக்கப்படாத மிக தொலைதூர விண்மீன் திரள்களைத் திரும்பிப் பார்க்கவும், ஆரம்பகால பிரபஞ்சத்தை புதிய வழியில் புரிந்துகொள்ளவும் உதவும். இந்த ஆரம்பகால விண்மீன் திரள்கள் நாம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரியதாகவும் பிரகாசமாகவும் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம் என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan