தங்க நாக்கு உடைய மம்மிகள் கண்டுபிடிப்பு

31 ஆவணி 2023 வியாழன் 10:06 | பார்வைகள் : 8114
2000 வருடங்களுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்ட மம்மிகளில் தங்க நாக்குகள் பொறுத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டுபிடிப்பு எகிப்தின் மத்திய நைல் டெல்டாவில் Quweisna என்ற இடத்தில் உள்ள அலெக்ஸாண்டிரியாவின் டபோசிரிஸ் மாக்னா கோவிலில் மோசமான நிலையில் பாதுகாத்து வைக்கப்பட்ட 16 மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
1000 ஆண்டுகள் வரை நிலத்தில் புதைந்து இருந்த இந்த மம்மிகளில் ஒற்றுமையான முறையில் மண்டை ஓட்டில் தங்க நாக்கு பொறுத்தபட்டுள்ளது.
எகிப்தின் தொல்பொருள் அமைச்சகம் இதனை ஆவணப்படுத்தியன் மூலம், மம்மி படுத்தப் பட்டவர்கள் இறப்புக்கு பிறகு உள்ள வாழ்க்கையில் பேசுவதற்கு உதவும் வழியாக இந்த தங்க நாக்குகள் பார்க்கப்பட்டு இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், இந்த தங்க நாக்குகள் எகிப்தியர்களால் நடத்தப்படும் சடங்கு முறை என்று நம்புகின்றனர்.
அத்துடன் இவை இறந்தவர்கள் பாதாள உலகின் தலைவன் ஓசைரிஸூடன் தொடர்பு கொள்ள உதவி செய்வதாக நம்பு இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளின் கழுத்தை சுற்றி பாம்புகள், கீரீடங்கள் மற்றும் கொம்புகள் இருந்தன.
அதைப்போல மம்மிகளின் மார்பில் பால்கன் தலையை குறிக்கும் நெக்லஸ் இருந்தன.
கோயிலின் முந்தைய அகழ்வாராய்ச்சியில் ராணி கிளியோபாட்ரா VII பெயர் மற்றும் உருவப்படம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025