Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல்

இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல்

5 ஆடி 2024 வெள்ளி 07:54 | பார்வைகள் : 14810


ஹெஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிற நிலையில் ஹிஸ்புல்லா இஸ்ரேலில் உள்ள பல ராணுவ தளங்களில் 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் மூன்று பிராந்தியங்களில் ஒன்றின் தலைவரான முகமது நமேஹ் நாசர்  இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இதற்கு பதிலடியாக, ஹிஸ்புல்லா இஸ்ரேலில் உள்ள பல ராணுவ தளங்களில் 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவினார். 

இந்த தாக்குதல் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக கருதப்படுகிறது.

இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்த ஏராளமான ஏவுகணைகள் மற்றும் வான்வழி இலக்குகள் இடைமறிக்கப்பட்டன. 

இது தொடர்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா? இது குறித்து உடனடித் தகவல் ஏதும் இல்லை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


அதிக வெடிகுண்டு கொண்ட கத்யுஷா ராக்கெட்டுகள் மற்றும் ஃபலாக் ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. 

பல்வேறு தளங்களை குறிவைத்து ஆளில்லா விமானங்களையும் ஏவியுள்ளது.

வெள்ளிக்கிழமையும் ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. லெபனான் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேலிய ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக எல்லையின் இருபுறங்களிலும் இருந்து சுமார் 10,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

வடக்கு இஸ்ரேலில் 16 ராணுவ வீரர்களும், 11 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். லெபனானில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

அவர்களில் பெரும்பாலானவர்கள் ஹிஸ்புல்லாவைச் சேர்ந்தவர்கள். டஜன் கணக்கான பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்