மருத்துவத் துறையினருக்கு 1 பில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கீடு - பிரதமர் அறிவிப்பு

1 புரட்டாசி 2023 வெள்ளி 15:16 | பார்வைகள் : 12865
மருத்துவத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 1 பில்லியன் யூரோக்கள் நிதிஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் Élisabeth Borne அறிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை Rouen நகர பல்கலைக்கழக மருத்துவமனைக்கு விஜயம்மேற்கொண்ட பிரதமர், அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், தாதியினரைச்சந்தித்தனர். மருத்துவத்துறையினர் பணிபுரியும் ஊழியர்களது கோரிக்கைகளைகேட்டறிந்தார்.
பின்னர் மருத்துவத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகைவழங்குவது தொடர்பில் அறிவித்தார்.
இரவு நேரத்தில் பணிபுரியும் ஊழியர்கள், சிறுவர்கள் பிரிவில் பணிபுரியும்ஊழியர்கள் உட்பட மருத்துவத்துறையினருக்கு மொத்தமாக 1 பில்லியன்யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவித்தார்.