Paristamil Navigation Paristamil advert login

சரத்பவார்- ஏக்நாத் ஷிண்டே திடீர் சந்திப்பு

சரத்பவார்- ஏக்நாத் ஷிண்டே திடீர் சந்திப்பு

23 ஆடி 2024 செவ்வாய் 01:24 | பார்வைகள் : 5442


பரபரப்பான மஹாராஷ்டிரா அரசியல் சூழ்நிலையில் நேற்று தேசியவாதகாங், சரத்சந்திரபவார் காங்., தலைவர் சரத்பவார், சிவசேனா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது மாநில நீர்ப்பாசன திட்டங்கள், பால்விலை உயர்வு, சர்க்கரை ஆலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

மஹாராஷ்டிராவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது அரசியல் ரீதியிலான சந்திப்பு எனவும், அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.. 

வர்த்தக‌ விளம்பரங்கள்