■ நீஸ் நகரில் பாரிய தீ பரவல்... சிறுவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் பலி..!
18 ஆடி 2024 வியாழன் 08:07 | பார்வைகள் : 11205
நீஸ் நகரில் (Nice - Alpes-Maritimes) நேற்று புதன்கிழமை நள்ளிரவு வீடொன்றில் தீ பரவியதில் சிறுவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் பலியாகியுள்ளனர்.
Santoline வீதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென தீ பரவியது. தீயணைப்பு படையினர் அழைக்கப்படுவதற்கு முன்னரே நிலமை கைமீறிச் சென்றது. கட்டிடத்தின் ஏழாவது தளத்தில் ஏற்பட்ட தீ, வேகமாக மேற் தளங்களுக்கும் பரவியது.
இச்சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட மொத்தம் ஏழு பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்த சிறுவர்கள் 5, 7 மற்றும் 10 வயதுடையவர்கள் எனவும், கட்டிடத்துக்குள் சிக்கியிருந்த மேலும் 33 பேர் பாதுகாப்பாக கடிட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் இச்சம்பவம் தொடர்பில் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan