Paristamil Navigation Paristamil advert login

 இஸ்ரேல் - காசா போர் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை 

 இஸ்ரேல் - காசா போர் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை 

15 ஆடி 2024 திங்கள் 07:22 | பார்வைகள் : 6309


கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,139 பேர் பலியாகியுள்ளது.

காசா முனையில் இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் 90 பேர் உயிரிழந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல் போர் விமானங்கள், ட்ரோன்கள் மூலம் ஏவுகணைகளை காசா முனையில் அல் மவாசி பகுதியில் வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

குறித்த தாக்குதலில் 90 பேர் உயிரிழந்ததுடன் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  தெரிவிக்கையில்,

ஆயுதக்குழு தளபதியான முகமது டெய்ஃப் மற்றும் இரண்டாம் நிலை தளபதி ரஃபா சலாமா கொல்லப்பட்டது குறித்து இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை என தெரிவிததுள்ளார்.

ஆனால் டெய்ஃப் அப்பகுதியில் இருப்பதாக கூறப்படுவதை ஹமாஸ் நிராகரித்துள்ளது. 

மேலும், ''இந்தப் பொய்யான கூற்றுக்கள் கொடூரமான படுகொலையின் அளவை மூடி மறைப்பதாகும்'' எனவும் குற்றம்சாட்டியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்