Paristamil Navigation Paristamil advert login

ரொறன்ரோவில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி!

ரொறன்ரோவில்  துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி!

26 ஆவணி 2023 சனி 09:27 | பார்வைகள் : 3350


ரொறன்ரோவில்  துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

இ்த துப்பாக்கி சூட்டில் ஆண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வயிற்றுப் பகுதியிலும், காலிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் இருந்த இருவரையும் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பிலான தகவல்கள் ஏதேனும் கிடைக்கப்பெற்றால் அதனை பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்