Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

யாழில் தீயிட்டு எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி மரணம்

யாழில் தீயிட்டு எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி மரணம்

2 ஆனி 2024 ஞாயிறு 14:15 | பார்வைகள் : 6466


யாழில் இளைஞனால் தீயிட்டு எரிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை (01) பெண்ணொருவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற இளைஞன், பெண்ணுடன் கல்லறை ஒன்றின் மீது அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். 

திடீரென இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டபோது, இளைஞன் மறைத்து வைத்திருந்த பெற்றோல் போத்தலை எடுத்து பெண்ணின் தலையின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். 

உடனே அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று தீயினை அனைத்து, பெண்ணை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். 

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த குற்றச்சாட்டில் இளைஞரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்