மூக்கை கொண்டு வேகமாக தட்டச்சு.., உலக சாதனை படைத்த இந்தியர்!

1 ஆனி 2024 சனி 13:34 | பார்வைகள் : 5360
மூக்கை கொண்டு வேகமாக தட்டச்சு செய்த இளைஞர் 3-வது முறையாக தனது சொந்த உலக சாதனையை முறியடித்துள்ளார்.
கடந்த 2023 -ம் ஆண்டு வினோத் குமார் சவுத்ரி (44) என்பவர் தனது மூக்கை கொண்டு 27.80 வினாடிகளில் ஆங்கில எழுத்துக்களை தட்டச்சு செய்து முதல் முறையாக சாதனை புரிந்தார்.
இதையடுத்து, அதே ஆண்டில் 2 -வது முறையாக 26.73 வினாடிகளில் தட்டச்சு செய்து தனது முதல் சாதனையை முறியடித்தார்.
இந்நிலையில், மீண்டும் தனது மூக்கை கொண்டு 25.66 வினாடிகளில் தட்டச்சு செய்து முதல் 2 சாதனையை முறியடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக வினோத் குமார் சவுத்ரி பேசுகையில், "எனது தொழில் தட்டச்சு செய்வது தான்.
அதில் சாதனை புரிய வேண்டும் என்று நினைத்தேன். உங்களுடைய வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் ஆர்வத்தை மட்டும் கடைசி வரை வைத்திருக்க வேண்டும்.
சில சமயம் மூக்கை வைத்து தட்டச்சு செய்யும் போது மயக்கத்தை ஏற்படுத்தும்.
ஆனால், பயிற்சியால் சாத்தியமாகும்" என்றார். இவர், "இந்தியாவின் தட்டச்சு மனிதர்" என்று அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1