பரிஸ் : €1.3 மில்லியன் மதிப்புள்ள கைக்கடிகாரம் திருட்டு.. மூவர் கைது.!
1 ஆனி 2024 சனி 11:05 | பார்வைகள் : 7978
€1.3 மில்லியன் யூரோக்கள் மதிப்புடைய ஆடம்பர கைக்கடிகாரம் ஒன்றை கொள்ளையிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மே 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
பரிஸ் 8 ஆம் வட்டாரத்தின் rue de Berri வீதியில் வைத்து மெக்ஸிகன் சுற்றுலாப்பயணி ஒருவரை தாக்கி, அவரிடம் இருந்து குறித்த கைக்கடிகாரத்தை கொள்ளையிட்டுள்ளனர். சமையல் கத்தி ஒன்றை பயன்படுத்தி அவர்கள் சுற்றுலாப்பயணியை தாக்கியுள்ளனர்.
17 தொடக்கம் 19 வயதுடைய மூவரே இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தனர்.
Villabé, Corbeil-Essonnes (Essonne) மற்றும் Santeny (Val-de-Marne) நகரங்களைச் சேர்ந்த குறித்த மூவரும், இரு நாட்காலின் பின்னர், மே 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan