மன்னாரில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு - இருவர் பலி

24 ஆவணி 2023 வியாழன் 09:05 | பார்வைகள் : 6831
மன்னாரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 46 மற்றும் 53 வயதானவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பள்ளிமடு, உலியன்குளம் பகுதிகளை சேர்ந்தவர்களே உயிரிழந்தனர்.
சடலங்கள் சம்பவ இடத்திலயே பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சந்கேநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.