கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி
28 ஆவணி 2023 திங்கள் 09:58 | பார்வைகள் : 8734
வெல்லம்பிட்டிய, கித்தம்பஹுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்தவர் மீதே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு 15 முகத்துவாரத்தைச் சேர்ந்த 47 வயதானவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan