கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லம் முற்றுகை - குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
26 ஆவணி 2023 சனி 12:52 | பார்வைகள் : 7729
பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களினால் குறித்த வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது.
“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்களும் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும்'' என தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆர்ப்பாட்டம் காரணமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு முன்பாக பெருமளவான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.


























Bons Plans
Annuaire
Scan