பரிஸ் : சென் நதிக்குள் விழுந்த ஒருவரைக் காணவில்லை!
                    9 வைகாசி 2024 வியாழன் 07:07 | பார்வைகள் : 10188
சென் நதிக்குள் விழுந்த ஒருவர் காணாமல் போயுள்ளார். 15 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மே 7 - 8 ஆம் திகதிகளுக்குட்பட்ட இரவில் இச்சம்பவம் port de Javel அருகே இடம்பெற்றுள்ளது. 2 மணி அளவில் தவறுதலாக சென் நதிக்குள் விழுந்ததாக எச்சரிக்கப்பட்டதை அடுத்து, அவரை தேடும் பணி இடம்பெற்றது.
அதிகாலை வரை தேடுதல் பணி இடம்பெற்றதாகவும், ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சென் நதிக்குள் தவறுதலாக விழுந்தமை விசாரணைகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்று புதன்கிழமை மாலை வரை மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan