இலங்கையில் விமானச் சேவையை ஆரம்பிக்க ஈரான் விருப்பம்!

8 வைகாசி 2024 புதன் 16:05 | பார்வைகள் : 3496
ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமானச் சேவையை ஆரம்பிப்பதற்கு ஈரானின் மஹான் எயார் விமானச் சேவை நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த விமானச் சேவையை ஆரம்பிப்பதற்கான தயார்படுத்தல்களை ஈரான் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.