Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : பாடசாலை முன்பாக மாணவனுக்கு கத்திக்குத்து!!!

பரிஸ் : பாடசாலை முன்பாக மாணவனுக்கு கத்திக்குத்து!!!

3 வைகாசி 2024 வெள்ளி 16:06 | பார்வைகள் : 12443


17 வயதுடைய உயர்கல்வி மாணவன் ஒருவர், பாடசாலைக்கு முன்பாக வைத்து கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

12 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் ஏப்ரல் 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. வகுப்புகளை நிறைவுசெய்துகொண்டு வெளியேறிய குறித்த மாணவனை வெளியே காத்திருந்த ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார்.

படுகாயமடைந்த மாணவன், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். 

தாக்குதலாளி கைது செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்