Paristamil Navigation Paristamil advert login

இன்று செயற்பாடுகள் தடைப்படும் Sciences Po!

இன்று செயற்பாடுகள் தடைப்படும் Sciences Po!

3 வைகாசி 2024 வெள்ளி 05:04 | பார்வைகள் : 14161


பரிசில் உள்ள பிரபல அரசியல் கலூரியான Sciences Po இன்று மே 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதல் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்ட Sciences Po, இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றைச் சந்திக்கிறது. அரசியல் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறையினரால் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Sciences Po ஊழியர்கள் வீட்டில் இருந்து கடமையாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்