Paristamil Navigation Paristamil advert login

குட்டைப் பாவாடை அணிந்த காரணத்தினால் இரு பெண்கள் மீது தாக்குதல்!

குட்டைப் பாவாடை அணிந்த காரணத்தினால் இரு பெண்கள் மீது தாக்குதல்!

1 வைகாசி 2024 புதன் 13:20 | பார்வைகள் : 11127


குட்டைப் பாவாடை அணிந்த காரணத்தினால் இரு பெண்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். நீஸ்  (Nice) நகரில் இச்சம்பவம் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

பழைய நீஸ் என அழைக்கப்படும் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் வீதியில் நடந்து சென்ற இரு பெண்களை வழிமறிந்த இரு ஆண்கள் அவர்களை மோசமாக அவமதித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அவ்விரு பெண்களும் அணிந்திருந்த ஆடை மிகவும் குட்டையாக இருந்ததாகவும், தொடைக்கு மேல் ஆடை இருந்ததாகவும், அதனாலேயே அவர்களை தாக்கியதாகவும் தாக்குதலாளிகள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் நிறைந்த மதுபோதையில் இருந்ததாகவும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்