Paristamil Navigation Paristamil advert login

தெற்கு சீனாவில் கோர விபத்து - 19 பேர் பலி

 தெற்கு சீனாவில் கோர விபத்து - 19 பேர் பலி

1 வைகாசி 2024 புதன் 12:00 | பார்வைகள் : 8375


தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தினால் 19 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று அதிகாலை 2.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து அந்த சாலையில் சென்றுக் கொண்டிருந்த 18 வாகனங்கள் அடுத்தடுத்து பள்ளத்தில் சிக்கின.

இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். 

இச்சம்பவம் பற்றி பொலிஸார்  மாற்றும் மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 500க்கும் மேற்பட்ட மீட்புப்படையினர் பள்ளத்தில் காயங்களுடன் கிடந்த 30 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த பள்ளமானது 184.3 சதுர மீட்டர் அளவை கொண்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்