ஹவாய் காட்டுத்தீ - கனடாவில் அவசரநிலை பிரகடனம்
18 ஆவணி 2023 வெள்ளி 09:42 | பார்வைகள் : 10259
ஹவாய் காட்டுத்தீ விபத்தில் பலி எண்ணிக்கை 100 ஐ விட அதிகரித்து செல்கின்றது.
மேலும் கனடாவின் வடமேற்கு மாகாணங்களிலும் கட்டுங்கடங்காமல் காட்டுத்தீ பரவி வருகின்றது.
தெற்கு மற்றும் வடமேற்கு ஸ்லேவ் பகுதிகளில் நிலைமை மோசமாக காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீ பரவி இருக்கும் பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தி மீட்புப்பணியில் மீட்பு பணிவீரர்களை கனடா களம் இறக்கியுள்ளது.
இந்நிலையில் தீயியல் கருகிய ஹவாய் தீவுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் செல்ல உள்ளார்.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவுக்கு ஏராளமான வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவுக்காக அங்கு செல்வர்.
இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஹவாய் தீவின் மேற்கே உள்ள மவுய் நகரில் காட்டுத்தீ பிடித்தது.
மளமளவென தீப்பற்றி எரிந்தநிலையில சூறாவளி காற்று வீசியதன் காரணமாக முக்கிய நகரங்களான ஹலைனா, குலா உள்ளிட்ட பகுதிகளுக்கு காட்டுத்தீ பரவியது.
இதனால் பெ வீடுகள் தீப்பிடித்து எரிந்ததுடன் 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் தீயில் கருகி நாசமாகின.
சேத மதிப்பு 3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக கணக்கிடப்பட்டுள்ள அதேசமயம் காட்டுத்தீ பரவல் குறையாத காரணத்தினால் சேத மதிப்பு அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறினர்.
காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 106 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 1300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.
தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan