பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பரிசில் ஆர்ப்பாட்டம்!
29 சித்திரை 2024 திங்கள் 15:46 | பார்வைகள் : 10092
பரிஸ் 5 ஆம் வட்டாரத்தின் rue de la Sorbonne வீதியில் இன்று திங்கட்கிழமை பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. Sorbonne பல்கலைக்கழகத்தில் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன.
நண்பகலுக்குப் பின்னர் அங்கு ஒன்றுகூடிய 50 வரையான போராட்டக்காரர்கள், இராட்சத அளவில் பாலஸ்தீன கொடி ஒன்றை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரான்சில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேற்றினர். அதன் போது இரு தரப்புக்கும் மோதல் வெடித்துள்ளது.
இந்த பரபரப்புக்கு நடுவே பல்கலைக்கழகத்தில் கல்விச் செயற்பாடுகள் தடைப்பட்டது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan