Paristamil Navigation Paristamil advert login

ஈராக் நாட்டில்  ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு தடை

ஈராக் நாட்டில்  ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு தடை

29 சித்திரை 2024 திங்கள் 04:35 | பார்வைகள் : 6261


ஈராக் அரசு இயற்றிய புதிய சட்டம் ஓரினச்சேர்க்கை திருமணங்களை தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக் அரசு இயற்றியுள்ள புதிய சட்டத்தின்படி, ஓரின சேர்க்கையாளர்களை திருமணம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

புதிய சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என சில அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. 

நாட்டில் வாழும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீதான தாக்குதலே புதிய சட்டம்.

ஓரினச்சேர்க்கையாளர் திருமணங்களை சட்டவிரோதம் என அறிவிக்கும் சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக் சமூகத்தை ஒழுக்கக்கேட்டில் இருந்து பாதுகாக்க இந்த சட்டம் இயற்றப்பட்டது. 

ஓரினச்சேர்க்கை திருமணம் மற்றும் விபச்சாரத்தை தடைசெய்யும் புதிய சட்டத்தை மீறுபவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள்.

அதிகபட்ச தண்டனை 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும்,

ஒரே பாலின ஈர்ப்பு அல்லது விபச்சாரத்தை ஊக்குவிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்

வர்த்தக‌ விளம்பரங்கள்