Paristamil Navigation Paristamil advert login

'வன்முறை எதையும் நியாயப்படுத்தாது!' - ஜனாதிபதி மக்ரோன்..!

'வன்முறை எதையும் நியாயப்படுத்தாது!' - ஜனாதிபதி மக்ரோன்..!

24 வைகாசி 2024 வெள்ளி 06:02 | பார்வைகள் : 12622


வன்முறை எதையும் நியாயப்படுத்தாது என Nouvelle-Calédonie தீவில் வைத்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுக்கடங்காமல் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து, Nouvelle-Calédonie தீவுக்கு ஜனாதிபதி மக்ரோன் பயணித்திருந்தார். அங்கு நிலவரங்களை ஆராய்ந்ததோடு, பல்வேறு கட்டுப்பாடுகளையும் கொண்டுவந்திருந்தார்.

நேற்று வியாழக்கிழமை மாலை ஊடகங்களிடம் பேசும் போது, 'வன்முறை எதற்கும் தீர்வாகாது. அரசியல் அல்லது குற்றமற்ற எதோ ஒன்று தீவை தேடித்தரும். வன்முறை எப்போதும் தீர்வைத் தேடித்தராது!' என மிக அழுத்தமாக தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்