பரிஸ் : தாயை கொன்ற மகன் கைது!
.jpg)
20 வைகாசி 2024 திங்கள் 08:46 | பார்வைகள் : 9121
தாயை கொன்ற ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பரிசில் இச்சம்பவம் மே 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
43 வயதுடைய ஒருவர், காவல்துறையினரை அழைத்து தகவல் தெரிவித்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் அவர், கடந்த 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தனது தயாரை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.
பரிஸ் 12 ஆம் வட்டாரத்தின் rue de la Voûte வீதியில் உள்ள வீட்டுக்கு காவல்துறையினர் சென்றடைந்த போது, அங்கு 75 வயதுடைய பெண் ஒருவர் கொல்லப்பட்டு இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர்.
கொலை செய்த மகனே காவல்துறையினரை அழைத்ததாகவும், அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3